சனி, 3 நவம்பர், 2012

சிதையும் உறவுகள்


kalla_kadhal_1கள்ளக் காதல் விவகாரத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஈடுபடுவதால், பெண் தரப்புக் குடும்பமும் ஆண் தரப்புக் குடும்பமும் அவமானத்தில் தலை குனிகின்றன.  பல இடங்களில் கள்ளக்காதலனுடன் பெண் சென்று விடுவதால் குடும்பமே தற்கொலை செய்து கொள்வதும், ஆண்கள் கள்ளக் காதலில் சிக்கும் போது அவனைச் சார்ந்த குடும்பம் சிதைவதும், இந்தச் சமூகத்தில் நடந்தபடிதான் உள்ளன.
ஆண்டுதோறும் தேசிய குற்றவியல் புள்ளி விவரங்களில் முதலிடம் பிடித்துள்ள விவரமாக விளங்குவது.  கள்ளக் காதலால் நிகழ்ந்த கொலைக் குற்றங்கள்தான்.  இருவேறு ஆயுதக் குழுக்களாக மோதிக் கொள்ளும் ரௌடிகள் கொலை 316தான். ஆனால், காதல் + கள்ளக் காதலால் நடந்த கொலை மட்டும் 237.  சில இடங்களில் கள்ளக் காதல் மற்றும் காதலில் ஈடுபட்டதுபோல் நடித்துப் பெண்களைக் கடத்திச் சென்று விபச்சார விடுதிகளில் சேர்க்க முனையும் போது எதிர்க்கும் பெண்கள் மட்டும் 464 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  கள்ளக் காதலன் தலைமறைவு, காதல் தோல்வி, காதலி வேறொருவரை மணமுடித்ததால் போன்றவற்றால் மட்டும் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு மட்டும் 61 பேர் இறந்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளில் கள்ளக் காதல், காதல் கொலைகளை அங்குள்ள சட்டங்கள் “பார்ட்னர் வயலன்ஸ்” என்று குறிப்பிடுகின்றன.
ஒரு கணவனுக்கோ, மனைவிக்கோ போலித்தனமான வாழ்க்கை அல்லது தன் கணவன், தன் மனைவியைத் தாண்டி வேறு ஆணுடனோ, வேறு பெண்ணுடனோ ஏன் ஈர்ப்பு ஏற்படுகிறது?  இந்த இருவரின் ஈர்ப்பால் விளையப் போகும் விளைவுகளை அவர்கள் அறியாததா?
அவர்கள் கள்ளக் காதலில் மட்டும் கைதேர்ந்தவர்களாக இல்லாமல், தங்கள் தவறு பிறருக்குத் தெரியா வண்ணம் மறைப்பதிலும் புத்திசாலிகள்.  ஆம், படிப்பில்லாத ஊர்களில் நிகழ்ந்த இதுபோன்ற குற்றங்கள்தான் கணக்கில் இதுவரை வந்துள்ளன.  தர்மபுரி – 38, கிருஷ்ணகிரி – 27, நாகை – 24, வேலூர் – 20, தேனி – 14 என இந்த கல்வியறிவோ, படிப்பறிவோ இல்லாத மாவட்டக் கள்ளக் காதல் கொலைகள்தான் வெளித் தெரிந்துள்ளன.  ஆனால், படித்த வசதியுள்ள, நடுத்தர பிரிவினரின் கள்ளக் காதல் கொலையானால்தான் இந்தப் பட்டியலில் சேரும்.
30 ஆண்டுகள் நெறியோடு வாழ்ந்த பெண்மணி ஒருவரை இந்தக் கட்டுரைக்காக தேடிப் பிடித்தோம்.  அவர் பத்தாண்டு ஆயிரக்கணக்கான பெண்கள் பணி புரிந்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.  அத்துடனில்லாமல், பல பெண்களுக்கும் நல்லதொரு ஆலோசனைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்தியவரும்கூட.
அவரிடம் கள்ளக் காதல் என்பது ஏன் ஏற்படுகிறது.  இது முழுக்க ஒழுக்கக் கேடான ஒன்றாயிற்றே.  இது தவறு என்பது தெரிந்தும் ஏன் நிகழ்கிறது என்று மட்டும்தான் கேட்டோம்.
கள்ளக் காதல் என்பது தவறு. ஒழுக்கக் கேடான ஒன்று என்பது தெரிந்ததுதான்.  ஆனால், அவ்வாறு அது நிகழ யாரெல்லாம் காரணம், எது காரணம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.  வேண்டுமென்றே எந்தப் பெண்ணும் திமிர் பிடித்து கள்ளக் காதலில் ஈடுபடமாட்டாள்.  எனினும் சில விதிவிலக்கு உள்ளது.  எல்லா வசதிகளும் வாழ்க்கைத் தேவையும் நிறைவாக இருந்தும் சிலர் இதுபோன்ற இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர்.  ஒன்று அந்தப் பெண்ணின் கணவன் தகுதியற்றவனாக சதா சர்வ காலமும் பணம் பணம் என்று அலைபவனாக இருக்கலாம்.  அல்லது எல்லா வசதி தந்த பின்னரும் அவனின் முணுமுணுப்புகள் பெண்ணின் சுயமரியாதைக்கு எதிரான நடவடிக்கைகள், சந்தேகப் பார்வை, பலவும் அவளை அன்றாடம் மனதளவில் கொல்லும் போது அவள் அவனை எதிர்ப்பதாக நினைத்து அவனிடம் பெற முடியாத நிம்மதியைத் தரும் இன்னொரு துணையை நாடுகிறாள்.  இந்தப் புதிய உறவு ரகசியமாக நீடிக்கிறது.  காலப் போக்கில் வெளிப்படும் போது எரிமலையாய் வெடித்து எரிமலைக் குழம்பு போகும் பாதையெல்லாம் பொசுக்குவது போல் அவர்கள் தொடர்பான அனைவரின் கௌரவமும் பொசுங்குகிறது.  சில நேரங்களில் சிலர் இதனை உணர்ந்து விலகுகிறார்கள்.  விலக இயலாதவர்கள் இடையூறாக இருக்கும் ஆணையோ பெண்ணையோ கொன்று விடுகின்றனர்.
கண் நிறைந்த கணவன்தான்.  ஆனால், குழந்தைகள் படிப்புச் செலவு, குடும்பச் செலவுக்கு போதாத நிலை, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழத் தெரியாத கணவனின் சம்பாத்யத்திற்கு ஈடுகொடுக்கத் தெரியாத நிலையில் பொருளாதாரம் சரிக்கட்ட சோரம் போகிறாள்.
நாலு பேரைப் போல் நாமும் வாழ வேண்டும் என்ற மட்டரகமான சிந்தனை அப்பெண்ணுக்குள் சாத்தானாக புகுந்து விடுகிறது.  நுகர்வுக் கலாச்சாரம் படோடபமான வாழ்க்கை வாழ அவள் நினைக்கும் போது அதற்காக வசதியான ஆணை அவன் அழகனோ, நோயாளியோ, கருப்போ, சிவப்போ அவளுக்குக் கவலை இல்லை.  அவனிடம் உள்ள செல்வம்தான் அவளின் குறிக்கோள்.  அதனால் உறவில் நாட்டமில்லாமல்தான் கள்ளத் தொடர்பில் ஈடுபடுவாள்.  பல இடங்களில் கள்ளத் தொடர்புக்கு இதுதான் பெருங் காரணமாக உள்ளது.  இவர் யார்?  அடிக்கடி வருகிறாரே?  கேட்டால், தூரத்து உறவு என்பாள் சொந்தக் குடும்பத்திடமே!  சில இடங்களில் கணவன் தன் வருமானத்திற்கும் மேலாக வீட்டில் சேரும் பொருட்களைப் பற்றி சந்தேகம் கொண்டு கேட்டாள்.  சீட்டு கட்டுகிறேன், சுயஉதவிக் குழு எனச் சொல்லிப் பார்ப்பாள்.  அவை கணவனின் விசாரணைக்கு உட்படும் போது சந்தேகம் அகலமாகும்.  அறிவுரை சொல்லிப் பார்ப்பான், அடித்தும் பார்ப்பான், அவளால் கணவனையும் இழக்க முடியாது, கள்ளக் காதலையும் மறுக்க இயலாமல் புழுங்குவாள்.  எல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் போலவே தன் பிள்ளைகளும் வளர வேண்டும் என்ற நினைப்பால் வந்தது.
சகிப்புத் தன்மையுள்ளவன் பேரளவுக்கு கணவனாக அவனுக்குள்ளேயே மனம் புழுங்கி பைத்தியமாவான்.  அல்லது முரட்டுத்தனம் உள்ளவன் குடும்ப வன்முறையில் ஈடுபடுவான்.  இன்னொரு நிலையுள்ள எதனையும் கண்டு மிரளும் மனநிலையுள்ள ஆண் குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல முற்படுவான்.  இது போன்ற ஆண்களால் அவளுக்கு கள்ளத்தனமானவன்தான் கதி என்று ஆகும்.
இன்னொரு ரகம் புடவை நகைகளுக்காக கணவன், பிள்ளைகள் வீட்டை விட்டுச் சென்றவுடன், தன் ஆசைக்கான பொருளை வாங்கித் தரும் பசையுள்ளவனை பிடித்துக் கொள்வது.  அவனுடன் ஊர் சுற்றுவது.  வீட்டிற்கு எல்லோரும் வரும் முன்பு வந்து விடுவது.
இன்னொரு ரகம் ஒதுக்குப்புறமான வீடு, தனிமை, கணவன், பிள்ளைகள் அவரவர் வேலை பார்க்க வெளியே சென்றவுடன், பிற ஆண்களை வீட்டிற்கே வரவழைத்து கள்ள உறவு கொள்வது இவர்கள் வழக்கம்.  இந்தத் தவறுக்கு தனிமைதான் பெரிய காரணம்.  பெரும்பாலான கள்ளக் காதல் கொலைகள் இந்த ரகத்தினால்தான் நடக்கிறது.
விதவைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழும் போது தனிமை அவர்களை வாட்டுகிறது.  உடல் ரீதியான தொடர்புகளை விட ஒரு ஆண் துணை தனக்கு தேவை என்று நினைக்கிறாள்.  சிலர் சில சமூகங்களில் விதவைத் திருமணம் மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள்.  இதனால், விதவை வெளிப்படையாக இல்லாமல் ஒரு ரகசிய வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறாள்.  கூடவே அவளுக்கு பிள்ளைகள் இருந்து விட்டால் கூடுதல் பாதுகாப்பாக கட்டாயம் ஒரு ஆண் துணை தேவை என்பதை உணருகிறாள்.  சில இடங்களில் பிள்ளைகள் அங்கீகரிக்கின்றன.  சில இடங்களில் எதிர்க்கின்றன.
ஒரு பெண் அன்னிய ஆடவருடன் எச்சரிக்கையுடன் பேசுவது முக்கியம்.  பேச்சிலேயே சந்தேகம் வந்தால் தவிர்க்க வேண்டும்.  இது ஆண்களுக்கும் அவ்வாறே பொருந்தும்.  பிறன் மனை நோக்கான் என்பது ஒரு பொதுவான இருபாலர்க்கும் உரிய ஒழுக்க நெறியாகும்.
எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான்.  ஒரு பெண்ணின் மனம் ஒழுக்க நெறியோடு இருந்தால், எந்த ஆணும் அவளை நெருங்க இயலாது.  தவறான பேச்சு, சமிக்ஞைகள், தேவையற்ற அரட்டை, மூன்றாம் நபரிடம் தன் குடும்ப நிலைகளைப் பகிர்ந்து கொள்வது முதலானவை நல்ல பெண்மணி தவிர்ப்பாள்.  நல்ல ஆணும் இது போன்ற இயல்புடன் உள்ள பெண்களை விட்டு விலகி இருப்பார்கள்.  தவிர்ப்பார்கள்.  ஆனால், மனம் ஒரு குரங்கு என்பதால், தாவ நினைக்கும்.  அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி சுய கட்டுப்பாடு மட்டுமே.
எவர் எந்த சமயத்தைப் பின்பற்றுகிறவர்களோ அதன் வழியில் மனதை செலுத்துவது சிறந்தது.  அதிலும் ஓர் சிக்கல் என்னவென்றால், தங்கள் சந்தேகங்களை நூல்கள் வழியாகவே கூடுமானவரை பெற முயல வேண்டும்.  நேரில் சென்று எவரிடம் விளக்கம் கேட்கும் போதும் அங்கும் கோளாறுள்ளவர்கள் இருந்தால் சிக்கல்தான்.  வழிபாட்டு இடங்களிலும் வில்லன்கள் உண்டு.  சில குடும்பம் இதுபோன்ற வழிகளிலும் சிலரால் சிதைக்கப்பட்டுள்ளன.
கணவன் என்பவன் வெறுமனே ஒரு ஏ.டி.எம். எந்திரம் போல் வேண்டிய பணம் தந்து விட்டால் போதும் மற்றவை சரியாகும் எனக் கருதக் கூடாது.  குடும்பத்தில் அனைவர் மீதும் அக்கறை உள்ளவனாக, அன்புள்ளவனாக விளங்க வேண்டும்.   தினசரி குறைந்தபட்சம் சில மணி நேரங்கள் மனைவி மக்களுடன் அமர்ந்து பேச வேண்டும்.  உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கூடுமானவரை நேரம் ஒதுக்கி குடும்பத்துடன் சென்று வரவேண்டும்.
மனைவி என்பவள் தனக்கு உடமை மட்டுமல்ல, தன் நேசத்துக்கும் அன்புக்கும் உரியவள் என்று மதிப்புடன் வைத்திருக்க வேண்டும்.  அன்பு செலுத்துவது என்பது அது ஓர் ஆயுதம்!  எந்தக் கேட்டையும் அந்தக் குடும்பத்தைத் தாக்குவதிலிருந்து தடுக்க வல்லது.  மனைவியிடம் பொய் சொல்லக் கூடாது.  மறைவு என்பது கூடவே கூடாது.
பெரும்பாலான அமைதி தவழும் குடும்பத்திற்குள் கணவன் மனைவி நல்ல முறையில் வாழ்க்கை நடத்தினாலும் பிள்ளைகள் மேல் கவனக் குறைவு ஏற்பட்டாலும் அவர்கள் வழியாக தேவையற்ற வம்பு வரும்.  இன்றைக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பலவும் குழந்தைகள் மனதை சிதைக்கும் காரணியாக உள்ளன.  பல காதல் திருமணங்கள் குடும்பத்தில் பட்ட துன்பத்தைக்கூறும் போது மதிப்புமிக்க உறவினரா?  அப்படிச் செய்தார்  இருக்காது,’’ என நீங்களே தீர்மானித்து குழந்தை தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூற விடாமல் வாயடைக்கின்றனர்.
சிறு வயதில் மறைவாக உறவுகளால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகள் அது சரியா?  தவறா?  சொந்தமான இவர் செய்ததையும் தாயிடம் தந்தையிடம் கூற முற்படும் போது காது கொடுத்து கேட்க வேண்டும்.  தன் பிள்ளை தானே “”அப்படிச் சொல்லாதே, வாயை மூடு!  இத வேற யார்கிட்டயும் சொல்லாதே’’, என அதட்டக் கூடாது.  குழந்தை சொன்னதைக் கேட்ட பின்பு பக்குவமாக எடுத்துச் சொல்லி சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு காண வேண்டும்.  ஏனெனில் பெரும்பாலான காதல் கத்தரிக்காய் எல்லாம்.  ஒரு பெண் அல்லது ஆண் தங்களுக்கு தங்கள் குடும்பத்தில் பாதுகாப்பு இல்லாதவர்களாக தங்கள் உணர்வைப் புரிந்து கொள்ளாதவர்களாக பெற்றோர் உள்ளனர் என நினைக்கும் போது அதற்கு வடிகாலாகத்தான் மன ஆறுதல் தரும் மாற்றம் தேடும் நிலைக்குச் செல்கிறார்கள்.  இந்த வழி காதலாகிறது.
மனம், மனத்திருப்தி, ஆறுதல், அன்பான உபசரிப்பு, தேவைகள், ஆடம்பரம், சொகுசு, அதிகமான உறவில் நாட்டம் அதற்கு வழி இல்லாமை, சந்தேகம், அடி-உதைகள், பாதுகாப்பு, வசவுகள், நோயாளி, கணவன் மனைவி குடும்பச் சண்டை, உறவினர் கொடுமை, மகப்பேறின்மை என்பன பல காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காக அது கிடைக்கும் இடத்திற்கு தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.  ஆண்களும் பெண்களும் இதுபோன்ற சமயத்தில் சுற்றி இருக்கும் குடும்பத்தினர் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ, பழிகள் சூழும் என்பது குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை.  அவர்கள் தேவை தற்காலிக நிவாரணம்.  பின்னர் இதுவே சூழலைப் பொறுத்து நிரந்தரமாகின்றன.  சிக்கல் உருவாகிறது.
இவ்வாறான இவர்களின் தேடலுக்கு வழி காட்டும் வடிகாலாக இருப்பது.  நண்பர்கள் மற்றும் ஊடகங்கள், இதுபோன்ற சமூக சீரழிவுக்கு ஊடகங்கள் கடந்த இருபதாண்டுகளாக பெருங் காரணமாக உள்ளன.  காதல், ஆடம்பரம், முறைகேடான உறவுக்கு நியாயம் கூறும் கதைகள் இல்லாமல் ஒரு தொடரோ, சினிமாவோ எடுக்கப்படுவதில்லை.  ஒரு பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிய சினிமா, தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளத்தின் சாட்டிங் முதலானவை.  தவறு செய்யத் தூண்டும் காரணிகளாக உள்ளன.  செல்போன்கள் வந்த பின்னால் கள்ளக் காதல்கள் அதிகம் நடப்பதை வலுப்படுத்தியுள்ளன!
கூட்டுக் குடும்பம் என்ற கட்டமைப்பு சிதைந்து தனிக்குடும்பம் என்ற நிலையில் தேவைகள் அதிகரித்தன.  அதை எதிர்கொள்ள முயலும் போது, குறிப்பாக பெண்கள் தேவைகளை எந்த வழியிலும் பெறலாம் என்ற நிலைக்கு பொருளாதார காரணிகளால் தள்ளப்படுகின்றனர்.  இதுபோன்ற நிலைக்கு ஆண்களும் தேவை அறிந்து அதை சரி செய்வதற்குப் பதில் அமைதியாகும் போது பெண் மாற்று சிந்தனைக்கு தள்ளப்படுகிறாள்.
இன்றைக்கு மனித மனங்களை வர்த்தக ரீதியாக சுரண்டும் போக்கு அதிகரித்துவிட்டது. குடும்ப வாழ்க்கையை பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. அவர்கள் இதனை சாதிக்க ஊடகங்களை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இந்த விளம்பரங்கள் நல்ல குடும்பத்தையும் கூட நுகர்வு வெறியுள்ள குடும்பமாக மாற்றி விடுகின்றன.
சமூக பேரழிவுகளுக்கு தொலைக்காட்சி சனியன்கள்தான் 90% காரணம். இதை கண்டுபிடித்த மேற்குலகம் ‘இடியட் பாக்ஸ்’ என்றே டிவியை குறிப்பிடுகிறது. ஆபாசமான காட்சிகள், வசனங்கள், பாடல்கள், இரட்டை மொழி சிரிப்புகள் என மலிந்துள்ளன. இவைகள் பொழுது போக்கு என்ற பெயரால் ஒளிபரப்பப்படுகின்றன.
அதேவேளை பல சேனல்கள் தாங்கள் தொலைபேசி வழியாக பணமீட்ட ஆபாசமான குறுஞ்செய்தியை ஒளிபரப்புவது போன்ற கேவலத்திலும் ஈடுபட்டுள்ளன.
இவைகளுக்கு சென்சார் எதுவுமில்லாததால் கட்டுப்பாடற்ற ஆபாசத்தை வெளிப்படுத்துகின்றன. இவை குடும்பச் சீரழிவுக்கும் வழகாட்டிகளாக விளங்குகிறது. இன்று கள்ள உறவுகள் அதிகரிக்க சினிமா தியேட்டர்களும் டிவிக்களும் பெரும் பங்குவகிக்கின்றன.
இப்படித்தான் பல இடங்களிலும் கள்ள உறவுகள் உருவாகின்றன, தொடங்கப்படுகின்றன, தொடங்கி வைக்கிறார்கள், தூண்டப்படுகிறார்கள் ஊடகங்களால்.
கள்ள உறவுக்கான காரணங்கள் எவை எவை, கொலைகள் ஏன் நிகழ்கின்றன என்பதெல்லாம் தெரிந்த விவரங்களைக் கொண்டுதான் நாம் பரிமாறிக் கொள்ள இயலுமே தவிர, தீர்வு என்ன என்ற வினாவிற்கு ஒரே பதில்.  ஒழுக்கமான வாழ்வின் உன்னதத்தை வளரும் தலைமுறைக்கு பக்குவமாகக் கூறுவதும், அவர்கள் பிரச்சனைகளைக் காது கொடுத்து பெற்றோர் கேட்பதும்தான் ஒரே தீர்வு.
அர்த்தமுள்ள, புரிதலான, ஈடுபாடுள்ள குடும்ப வாழ்க்கைதான் நம்மையும், நம் குடும்பத்தையும் காக்கும்.  சமூக நோக்குள்ள ஊடகங்கள் தங்களுக்குள் சுய கட்டுப்பாட்டை வளர்த்து, இதுபோன்ற செய்திகளைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
குடும்பங்களில் இதுபோன்ற தொடர்கள் வரும் போது தவிர்ப்பதும் நல்லதுதான்.  அதைப் போலவே பொருட்கள் விளம்பரம் வரும் போதும் சேனலை மாற்றுவதும் நல்லதுதான்.  நம் மனம் கெடாமல் இருக்க கூடுமானவரை என்னென்ன வழிமுறை உண்டோ, புனித பயணம், சுற்றுலா, நல்ல நூல்களைப் படிப்பது என நம் நேரத்தை நாமே மேலாண்மை செய்தால் எந்த சாத்தானும் நம்மை அணுகாது.
நன்றி: சமூகநீதி முரசு 

சனி, 13 அக்டோபர், 2012

பணமும் – மீடியாவும் உலகை ஆளுகின்றன


InTheMedia430c
“காலம் மாறிவிட்டது” என்ற சொல் மக்களிடம் அடிக்கடி கேட்கக் கூடிய சொல்லாக புழங்கக் கூடியதாக இருக்கிறது. மக்களில் ஒருசாரார் தனக்கு விருப்பம் இல்லாத நிகழ்வு ஏதாவது நடந்தால்  “என்ன செய்வது எல்லாம் காலம் மாறிப்போச்சு” என்பார்கள். இது எந்த அளவிற்கு சரி என்று நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். காலம் எப்படி மாறும்? காலம் மாறி விட்டது என்றால் இறைவனின் படைப்புகளான இயற்கை அனைத்திலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது அதனால் மனிதர்களின் வாழ்விலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது என்று பொருள்.
இறைவனது படைப்புகளான பூமி, சூரியன், நிலா, காற்று, நீர், நிலம் இவற்றின் இயக்கம் என்று எதிலும் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக இந்த இயற்கைக் கொடையின் சிலவற்றில் இன்றைய மனிதன் நாசத்தை ஏற்படுத்தி வருகிறான். சேதத்தை ஏற்படுத்தி வருகிறான். ஆனால் அன்றாடம் மக்கள் காலம் மாறிவிட்டது. மாறிய காலத்திற்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று புலம்பித் தள்ளும் காட்சியை பார்க்கின்றோம்.
காலம் மாறுமா?
யுகமுடிவுநாள் நெருங்குகின்றவரை அவ்வளவு எளிதாக காலம் மாறாது பிறகு மக்கள் புலம்பும் காலம் மாறுகிறது என்பதற்கு என்ன பொருள்?
மக்களின் மனநிலை மாறுகிறது என்று பொருள். மக்களின் மனநிலை மாறுகிறதா? மாற்றப்படுகிறதா என்றால் திட்டமிட்டு மாற்றப்படுகிறது என்பது தான் உண்மை. பணமும் மீடியாவும் ஒரு சிலரின் கையில் சிக்கி உலக மக்களின் மனநிலையை மாற்றுகிறது. பணமும் மீடியாவும் முதலாளித்துவத்தின் அசைக்க முடியாத சொத்துக்கள்.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து ஆண் / பெண் இருவரும் எதை சிந்திக்க வேண்டும், அதில் எவற்றை செயல்படுத்த வேண்டும், என்ன உண்ண வேண்டும், எப்படி உடுத்த வேண்டும் அவர்களின் குடும்ப வாழ்வு, குழந்தை வளர்ப்பு, வீட்டு விழாக்கள் போன்ற வாழ்க்கையின் அனைத்து புற தேவைகளும் அமைய வேண்டிய விதம் குறித்து முடிவு செய்யும் ஆற்றல் அந்த நடுத்தர குடும்பத்து ஆண் / பெண் கையில் கிடையாது. அதை முதலாளித்துவமும் மேற்கத்திய உலகமும்தான் முடிவு செய்கிறது.
முதலாளித்துவத்தின் சுரண்டல் சிந்தனைக்கேற்ப அவற்றை உலகம் முழுவதும் நிலைநிறுத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் மீடியா வலிமைக்கேற்ப மக்களின் மனநிலை வலிந்து மாற்றப்படுகிறது.
40-50 ஆண்டுகளுக்கு முன்பு பணம் எனும் ரூபாய் நோட்டின் தேவை பொது மக்களிடம் குறைவாகவே இருந்தது. காரணம் அன்றைய மக்களின் வாழ்க்கை தேவைகள் குறைவாகவே இருந்தது. அன்றாட உணவுத் தேவைகளை அவர்கள் வைத்திருந்த நிலமே பூர்த்தி செய்யும் அளவிற்கு இயற்கை சார்ந்த வாழ்வு முறையாக இருந்தது. நடுத்தர வர்க்கத்தினர் கூட நிலவுடமை செல்வந்தர்களாக இருந்தனர். நிலம் வாங்குவது தான் சமூகத்தில் பெருமைக்குரிய அதிகபட்சத் தேவையாக ஆசையாக இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்திய நடுத்தர மக்களை மையப்படுத்தி மேற்கத்திய வாதிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தயாரித்த நவீன உயிரற்ற ஆடம்பர பொருட்களை மக்களிடம் வலிந்து திணித்தனர். அந்தப் பொருட்களின் மேல் மக்கள் மோகம் கொள்வதற்காவே உருவாக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி சேனல்களை கொண்டு உலகம் முழுவதிலும் நுகர்வு கலாச்சாரத்திற்கு மக்களை அடிமைகளாக மாற்றுகின்றனர். 24 மணிநேரமும் மக்களை மூளைச் சலவை செய்கின்றனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் பித்தம் தலைக்கேறி இன்றைய நடுத்தர சமூகம், வீட்டில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, ஹோம்தியேட்டர், இன்னும் காஸ்மெட்டிக் சாமான்கள் என்று உயிரற்ற பொருட்களை ஆசை ஆசையாக வாங்கி குவிப்பதை பெருமைக்குரிய சொத்தாக நினைக்கிறது. இந்தப் பொருட்கள் இல்லாமல் வீடே இல்லை என்றும் இது இல்லாமல் வாழவே இயலாது என்றும் நமது மூளையில் ஆணித்தரமாக பதிய வைத்து விட்டனர். இதற்காக பணம் சம்பாதிப்பதையே தனது வாழ்நாள் குறிக்கோளாக  இன்றைய சமூகம் கருதுகிறது.
நஞ்சை, புஞ்சை நிலங்கள், தோப்புகள், ஆடு, மாடு, கோழி என்று உயிருள்ள செல்வங்களை கொண்டு இயற்கை வாழ்வு வாழ்ந்த மனிதன் இன்று உயிரற்ற எலக்ட்ரானிக் பொருட்களோடு நோயை வலிந்து வரவேற்கும் பாக்கெட் உணவுகளோடும் வாழும் மனிதனாக மாறிப் போனான். அப்படி வாழ்வதை பெருமையாகவும் படித்தவர்கள் வாழும் வாழ்க்கை முறையாகவும் கருதுகிறான். இதனால் இந்த பொருட்களை எல்லாம் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணம் குவிகிறது.
இதுதான் மக்கள் கூறும் காலமாற்றம்.
இன்றைய சினிமா மற்றும் மீடியாக்கள் எந்த வாழ்வுமுறையை  மக்களிடம் திணிக்கின்றனவோ அதுவே தனக்கு உகந்த வாழ்வுமுறை. உணவு, உடை, கல்வி, மருத்துவம், கலாச்சாரம் என்று எல்லாவற்றையும் சினிமா, மீடியாவை பார்த்துப் பார்த்து அப்படியே காப்பியடிக்கும் மனிதனாக இன்றைய இந்தியன் / தமிழன் மாறிப் போனான். இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கு அல்ல. இந்த மீடியாக்கள் அதிகம் குறிவைப்பது பெண்களைத் தான். அதனால் தான் பெண்கள் டிவி சீரியல்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். அதில் வரும் கதாபாத்திரங்களை தங்களுக்கான வழிகாட்டியாக கொள்கின்றனர்.
இந்த கோமாளித்தனமாக உணர்வற்ற உயிரற்ற வாழ்க்கை முறைக்கு சரியான மாற்றுத்திட்டத்தை முறையான வாழ்வு திட்டத்தை இஸ்லாம் முன்வைக்கிறது.
தேவைகளை குறைத்து இயற்கையோடு இயந்து வாழ இஸ்லாம் போதிக்கிறது.
ஆசைகளை அடக்காதே கடன்  வாங்கியாவது பொருட்களை வாங்கி அனுபவி என்று முதலாளித்துவம் கூவி கூவி அழைக்கிறது.
உள்ளத்தை மகிழ்வாக அமைதியாக ஆக்கிக் கொள் உன் வாழ்வு செழிக்கும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது!
உள்ளத்தைப் பற்றி கவலைப்படாதே உடலை சந்தோஷமாக சொகுசாக அனுபவிக்க விடு என்று முதலாளித்துவம் து£ண்டுகிறது!
வாழும் வாழ்க்கைக்கு ஒரு பொருள் இருக்கிறது. அதை இப்படித்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
வாழும் வரை வசந்தத்தை அனுபவி. எந்தத் தடையும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று ஊக்கப்படுத்துகிறது முதலாளித்துவம்!
உற்றார், உறவினர், குடும்பம், சமூகம், பூமி, என்று எல்லோரோடும் எல்லாவற்றோடும் இணைந்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
உற்றார் உறவினர் குடும்பம் என்றெல்லாம் போட்டு அலட்டிக் கொள்ளாமல் தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற சிந்தனை தான் சிறந்தது என்று முதலாளித்துவம் வலியுறுத்துகிறது!
இவ்வாறு தனிமனித வாழ்வு முதல் – உலகின் ஆட்சி முறை வரை எல்லா நிலையிலும் இஸ்லாம் முதலாளித்துவத்தோடு நேரடியாக அடிப்படையிலேயே மோதுவதால் இஸ்லாத்தின் மீதான வெறுப்புகளை மீடியாக்கள் மூலம் உலகம் முழுவதும் வலிந்து பரப்புகின்றனர். எல்லையற்ற பணத்தின் துணையோடு உலகையே தன்வசம் திருப்பும் ஆற்றலுடைய மீடியாக்கள் மூலம் தாங்கள் நினைத்த உடன் ஒரு பொருளை உலக மக்களிடம் திணிக்கின்றனர். தாங்கள் விரும்பாத அரசு நிர்வாகத்தை மாற்றுகின்றனர். உண்மையை மறைத்து பொய் செய்திகளை பரப்புகின்றனர். கேடுகெட்ட அவர்களின் கலாச்சாரத்தை உயர்தரமான கலாச்சாரமாக மாற்றுகின்றனர். அதையெல்லாம் வன்மையாக கண்டிக்கும் இஸ்லாத்தை கொச்சை படுத்துகின்றனர். படுபயங்கரமான கொள்கை என்று பறைசாற்றுகின்றனர். உலக மக்களிடம் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய உலக மீடியாக்களில் 96 விழுக்காடு யூதர்கள் வசம்தான் உள்ளது. இவர்கள் உலக மக்களை தாங்கள் விரும்புவது போல மாற்றுகின்றனர்.
ஒன்றும் அறியாத மக்கள் காலம் மாறுகிறது என்று புலம்புகின்றனர்.
பணம் – மீடியா இவை இரண்டும் இருந்தால் உலகை நம் வசப்படுத்த முடியும். நாம் விரும்புவதை மக்களிடம் விதைக்க முடியும். இதுதான் இன்றைய உலகின் தாரக மந்திரம்.
இன்று
இணைவைத்தலையும் – கலாச்சார சீர் கெடுகளையும் விதைக்கின்றனர்.
நாளை
ஏகத்துவத்தையும் – இயற்கை வாழ்வையும் விதைப்பதற்கு
இறைநம்பிக்கையாளர்களுக்கு பணமும் – மீடியாவும் தேவை.
இறைவனிடம் பிரார்த்தித்து முயற்சிப்போம்!
- CMN சலீம்
நன்றி : சமூகநீதி முரசு 
அடுத்த தலைமுறையை  படித்த தலைமுறையக்கிட ,,,,,
அனைவரும்  இணைந்து  கல்வி சேவை செய்வோம் ! சமுகத்தை உயர்த்துவோம் 

சனி, 29 செப்டம்பர், 2012

CMN சலீம் துபாய் சுற்று பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் 
கண்ணியம்மிக்க சகோதரர்களே,,
தமிழக முஸ்லிம் மக்களின் கல்வி,வேலைவாய்ப்பு,அதிகாரம்,சட்டம் மற்றும் பொருளாதார நிலைகளில் தன்னிறைவு பெறவேண்டும் அதற்கு கல்வி அவசியம்,நம் முஸ்லிம் மக்களின் வாழ்வியல் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்று உலகளாவிய சதி திட்டத்தை மேற்கத்திய யூத சக்திகள் அவ்வபோது நிகழ்த்தி வருகிறனர் ,அதற்கான எதிர்ப்புகளை நாம் பதிவு செய்து கொண்டுயிருக்கிறோம்,அல்லாஹ் (சுபு) நமக்கு அருளிய குர்ஆன்,நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் நெறி முறையை பின்பற்றி உலக சமுதாயத்திற்கு முன்மாதிரி சமுதாயமாக வாழ வேண்டும் இன்ஷா அல்லாஹ், 
சமூகநீதி அறக்கட்டளை நிறுவனரும்,தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க தலைவரும் சகோ CMN சலீம் அவர்கள் முஸ்லிம் மக்களின் கல்வி நிலை மேம்படவும் மார்க்க கல்வியுடன் உலக கல்வியும் கற்ற பெண் கல்வியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் தமிழக முழுவதும் பிரசாரம்,கருத்தரங்கம்,மாநாடு,வழிகாட்டுதல் நிகழ்சிகளை  கிராமம் முதல் பெருநகரம் வரையிலும் கத்தார்,குவைத்,மஸ்கட்,துபாய் போன்ற வெளிநாடுகளிலும் மேற்கொண்டு வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
 
கடலோர ஊர்களில் வாழும் முஸ்லிம் பெண்களின் கல்வி நிலையை மேன்படுத்தி பெண்களை அறிவில் சிறந்த கல்வியாளர்களாக மார்க்க கல்வியும் கற்ற பெண் கல்வியாளர்களாக  உருவாக்கும் நோக்கத்தில் சகோ CMN சலீம் அவர்கள் தலைவராக உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மூலம் நம்முடைய சமுதாய சொந்தங்களின் பங்களிப்பில் அம்மாபட்டினத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு முதல் அன்னை கதீஜா பெண்கள் கலை & அறிவியல் கல்லூரி செயல்படும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது, இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை உயரும், பெண் கல்வியாளர்களை உருவாக்கும் BISED (bachelor of islamic school education ) என்கிற சிறப்பு பாடத்திட்டம் 40 மாணவிகளை கொண்டு இயங்கி வருகிறது 
6 கோடி திட்ட செலவில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி இது வரை 119 பங்குதாரர் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது . 31 பங்குகள் மீதி உள்ளது,ஒரு பங்கு தொகை 4 லட்சம்.இறைவனின் மார்க்க கல்வியை கற்று கொடுக்கும் நோக்கத்தில் உருவாக உள்ள இக்கல்லூரியில் நீங்களும் பங்களிப்பு செய்து இறைவனின் அருளை பெற கேட்டு கொள்ளுகிறோம்.மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட அலைபேசியில்  தொடர்பு கொள்ளவும்.  
துபாய் -இம்ரான் கரீம் -0559739408
CMN சலீம்  - 0566050795
தமிழகம் -CMN சலீம் -9382155780 / 9840182251
 
.
வரும் 30,1,2,3 ஆகிய தேதிகளில் சகோ CMN சலீம் அவர்கள் அமீரக சுற்று பயணம் மேற்கொள்ளயிருகிறார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

வஸ்ஸலாம் ,
மக்கள் தொடர்பு செயலகம் ,
துபாய்
M.IMRAN KAREEM
+971559739408

imran2mik@gmail.com
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்!

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்



நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64) முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119) ஒப்பந்தங்களை முறிப்பது (2:100) மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57) தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161) உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96) ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13)

… இவையெல்லாம் யூதர்களின் குணங்களும் இழிவான செயல்களுமாகும் என்று அல்லாஹ் (சுபு)  தனது  திருமறைக் குர்ஆனில் அடையாளம் காட்டியிருக்கிறான்.
இந்த இழிகுணம் மற்றும் ஈனச் செயல்களின் காரணமாக வரலாற்றில் உலகின் எந்த பாகத்திலும் யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை, வாழவிடப்பட்டதும் இல்லை. உலகின் பலதேசங்களில் மன்னர்களின் ஆணைக்கிணங்கவே இவர்கள் கடுந்துன்பங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள்; அடித்து விரட்டப்பட்டார்கள். இதனால் மிக நீண்ட காலமாகவே இவர்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாகவே திரிந்தார்கள். இதன் விளைவாக நமக்கொரு நாடு வேண்டும்; நம்மை ஒடுக்கிய உலகத்தை நாம் மேலாதிக்கம் செய்து பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் 1700களின் மத்தியில் இவர்களுக்கு ஏற்பட்டு அதற்கான செயல்வடிவங்களும் ஏற்படத் தொடங்கின.
இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு 1760களிலிருந்து பல ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். அந்நிலையில் ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருந்த ’ஆதம்வைஸ் ஹாரிபட்’ என்ற யூத அறிஞர் 1776 ஆம் ஆண்டில் `பேரொளியாளர்களின் சங்கமம்’ என்ற பொருள்படும் இதழ் ஒன்றை யூதர்களிடையே ரகசியமாகச் சுற்றுக்கு விட்டு வந்தார். அவ்விதழில் “கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம் யூத இனம் மட்டுமே! ஆகவே அவர்களே இவ்வுலகை ஆளவும் ஆதிக்கம் செலுத்தவும் உரிமையுள்ளவர்கள்” என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்தி பல ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இது சிதறிக் கிடந்த யூதர்களை ஒருங்கிணைக்கப் பெரிதும் உதவியதுடன் அவர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் வலுசேர்த்தது.
1869ஆம் ஆண்டில் `ஹாஹாம் ஷெரோன்’ என்ற யூதரின் (ஹாஹாம் என்றால் யூதர்களின் மொழியில் ‘சித்தாந்த’ குரு என்று பொருள்) தலைமையில் “யூதர்களை ஒருங்கிணைப்பது, உலகை மேலாதிக்கம் செய்வது” என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷெரோன் இப்படிக் கூறினார்.
யூதர்களாகிய நாம் இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால் நமக்கு இரண்டு ஆற்றல்கள் தேவை. ஒன்று, ஏராளமான தங்கம். மற்றொன்று பத்திரிக்கை (அக்காலத்தில் தங்கம்தான் பணமாக புழக்கத்தில் இருந்தது என்பதையும் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)
ஷெரோனின் யோசனைக்கேற்ப யூதர்கள் ஏராளமான தங்கங்களை அதாவது பொருளாதாரத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள். அதே சமயம் ஊடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். தாங்களே ஊடகங்களை உருவாக்குவது, வளர்ந்த ஊடகங்களில் ஊடுருவி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, பரவலான மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள ஊடகங்களை விலைக்கு வாங்குவது என்று தொடங்கிய அவர்களின் ஊடக ஊடுருவல் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
உலகிலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீத ஊடகங்கள் இன்று யூதர்களுக்குச் சொந்தம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ந்த, முன்னணி ஊடகங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் 52 சதவீத ஊடகங்கள் யூதர்களுக்
குச் சொந்தம். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் வெளியாகும் முன்னணி இதழ்களில் பெரும்பாலானவை யூதர்களுக்குச் சொந்தம்.யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 1.ஊடகங்களை உருவாக்குவது, 2. வளர்ந்த ஊடகங்களை மட்டும் விலைக்கு வாங்குவது, 3. முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கிக் குவித்துக் கொள்வது.
அமெரிக்காவில் பெருவாரியான வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள “நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ்” ஆகிய நாளேடுகளின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும்.
அதேபோல வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்க்கும் `டைம்’ வார ஏட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான `நியூஸ் வீக்’ இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இன்று யூதர்களின் கையிலேயே இருக்கிறது.
`ஃபார்டுவர்டு’ என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் கட்டுப்படுத்துவது போலவே `நியூயார்க் போஸ்ட்’ என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ்கார்ப்பரேஷனின் முதலாளியும் நம்ம ஊரு ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான `ரூபர்ட் முர்டோக்’ என்ற யூதர் கட்டுப்படுத்துகிறார்.
அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள `வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழும் யூதர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை.
இந்த நாளிதழின் தலைமைப் பீடத்தில் 1933 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யூதர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன் தொழிலாளர் நலன் நிருவாகக் கமிட்டியில் `லாரீ இஸ்ரேல்’ என்ற யூதர் தலைவராக இருந்து வருகிறார்.
அமெரிக்காவிலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரத்திலிருந்துவெளிவரும் ’பீகான்டைம்ஸ்’ என்ற நாளேட்டை நியூஹவுஸ் நிறுவனத்தின் யூத முதலாளி வாங்கினார்.
அந்த நாளிதழை வாங்கியபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் விழா நடந்தது. அதில் உரையாற்றிய நியூஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார் :- “நான் பீகான் டைம்ஸை வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்”!
இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 தேசங்கடந்த அதாவது கண்டங்களைக் கடந்த நாளிதழ்கள், 24 தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது.
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மிகப்பிரபலமும் செல்வாக்கும் படைத்த ’டைம்ஸ்’ நாளேட்டை ரூபர்ட் முர்டோக் கைப்பற்றிக் கொண்டார். மேலும் சண்டே டைம்ஸ், சன், நியூஸ்ஆஃப்த வேல்ட் போன்ற நாளேடுகளும் சிட்டி மேகசின் என்ற வார ஏடும் ரூபர்ட் மூர்டோக்குக்குச் சொந்தம்.
பலகோடி மக்களின் “அறியாமையைப் போக்கி அறிவொளி ஏற்றும்’’ நாற்றமெடுத்த ‘ப்ளேபாய்’ இதழும் யூதர்களுக்குச் சொந்தமானதே. 1855ஆம் ஆண்டில் யூதர்களால் தொடங்கப்பட்ட டெய்லி டெலிகிராப் நாளேடு யூதர்களின் ஆதிக்கத்தை இன்றும் பிரிட்டனில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில்..
ஆஸ்திரேலியாவில் ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாளேடு மற்றும் வார ஏடுகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இவையனைத்தும் முன்னணி ஏடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முன்னணி ஏடுகளையும் செய்தி நிறுவனங்களையும் யூதர்களே சொந்தமாகக் கொண்டுள்ளனர். போரிஸ் பெர்ஸோவ்ஸ்கி, கோசின்ஸ்கி ஆகிய இரு யூதர்களும் ரஷ்யாவிலுள்ள ஏராளமான ஊடகங்களின்  முதலாளிகளாக உள்ளனர். ரஷ்ய மொழியில் வெளிவருகிற மிகப் பிரபலமான நாளேடுகளான சேஃப் துன்யா, நோஸாஃபோஸீமாய, அஸ்ஃபசோதா ஆகிய நாளேடுகளும் ஈதோகீ, ஓஹூ நியூக் முதலான வார ஏடுகளும் மேற்படி இரு யூதர்களுக்கே சொந்தம்.
இவை தவிர ஏராளமான அச்சு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் இருவருக்கும்  சொந்தமாக உள்ளன. பிரான்சில் ஷார்ல் ஹாப்ஸ் என்ற யூதர் 1935 ஆம் ஆண்டில் ஹாப்ஸ் செய்திகள் என்ற பெயரில் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அச்செய்தி நிறுவனத்திலிருந்து ’பிரஞ்ச் பிரஸ்’ என்ற தினசரி வெளிவந்தது. இதுவும் இதுபோன்ற எண்ணற்ற பல ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் யூதர்களுக்குச் சொந்தமாக இன்று பிரான்சில் உள்ளன.
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மின்னணு ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களிலும் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை முன் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். . எனினும் அந்தப் பக்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அடையாளம் காட்டியிருக்கிறோம். அதுவும் உலகளவில் மிகவும் பிரபலமடைந்த ஊடகங்களின் நிலையை மட்டுமே அடையாளம் காட்டி இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒரு நாடு இல்லாமல் – போக்கிடமில்லாமல் நாடோடிகளாக யூதர்கள் திரிந்து கொண்டிருந்த நிலையில், தங்களுக்காக ஒரு நாடு, ஏராளமான சொத்துக்கள், ஊடகங்களில் ஊடுருவல், மேலாதிக்கம் என்று சிந்தித்துக் களமிறங்கியதில் “ஏதோ ஒரு வகையில்” நியாயமிருக்கலாம்.
ஆனால் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நிலப்பரப்பை அமெரிக்க, ஐரோப்பிய ஷைத்தானியப் பேரரசுகளின் துணையுடன் சர்வாதிகாரமாக ஆக்ரமித்துக் கொண்டு அதில் தங்களுக்கென ஒரு நாட்டையும் இராணுவத்தையும் உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீன முஸ்லிம்களை ஒடுக்கிப் படுகொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களில் இந்தளவுக்கு வெறித்தனமான ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் மிகவும் முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். அவர்கள் இன்றும்  இந்த அளவுக்கு ஊடகங்களில் வெறித்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியமான மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.
1. வர்த்தகச் சூதாட்டம். அதாவது இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலக நாடுகளை நிதிச்சந்தைக் கட்டுப்படுத்தும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் பங்குச்சந்தைக்குள் நுழைந்து கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கலாம் என்ற சூழலில், வளர்ந்த, தேசங்கடந்த ஊடகங்களின் மூலம் பங்குச் சந்தையில் கோடி கோடியாய் லாபமீட்டலாம் என்பதுடன் படிப்படியாக பங்குச் சந்தையையே கைப்பற்றி உலக நாடுகளை ஆட்டுவிக்கலாம். அத்துடன் பங்குகளை ஒரே நேரத்தில் உருவி பங்குச்சந்தையையும் அதைச்சார்ந்து நிற்கும் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டங்காணச் செய்வோம் என்று மிரட்டி பல காரியங்களை பல நாடுகளின் அதிபர்கள் மூலமே சாதித்துக் கொள்ளலாம். மேலும் ஊடகங்கள் கைவசம் இருப்பதால் மந்த நிலையில் இருக்கும் பங்குச் சந்தையைக் கூட சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஏற்றம் காணுகிறது. கொள்ளை லாபம் கொட்டப்போகிறது என்று புளுகி, சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களை முதலீடு செய்ய  வைத்துக் கொள்ளையிடலாம். மொத்தத்தில் பலதேசங்களை மொட்டையடிக்கலாம். பலதேசங்களை மிரட்டலாம், ஆட்டுவிக்கலாம், காரியம் சாதிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இன்று வளர்ந்த, முன்னணி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் கொள்ளை லாபத்தில் தான் இயங்குகின்றன. விளம்பரம் மற்றும் அரசின் சலுகைகள் மூலம் கோடி கோடியாய் லாபமீட்டுகின்றன. பெருந்தொழில் அதிபர்களின் தரகர்களாகச் செயல்பட்டு டாலர்களில் குளிக்கின்றன. மேலும் தங்களது உற்பத்திப் பொருட்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் ‘உன்னதமாகச்’ சித்தரித்து மக்கள் மூளையில் திணித்து அதன் மூலமும் பில்லியன் கணக்கில் அறுவடை செய்கின்றன.
2. கருத்தியல் பயங்கரவாதம். உண்மைகளை மறைப்பது, திரிப்பது, அவதூறுகளையும் பீதியையும் பரப்புவது. அதாவது கடந்த கால உண்மைகளை மறைத்து, மேற்குலக அரசுகள் நிகழ்த்திய / நிகழ்த்தி வருகிற வன்முறைகளை மறைத்து, அரசு வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் தீவிரவாதமாகச் சித்தரித்து உலகமக்கள் மூளையில் திணிப்பது., சுருங்கச் சொன்னால், அவர்கள் தீர்மானிக்கும் செய்திகளையே படிப்பதும், பேசுவதும், சிந்திப்பதுமாக உலக மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது.
இதை எளிமையாகக் கூற வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதாவது இன்று உலக அளவில் வளர்ந்த முன்னணி ஊடகங்கள் எவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றனவோ அவற்றைத்தான் நடுத்தர, சிற்றிதழ்களும் செய்திகளாக வெளியிடுகின்றன. அவற்றைத்தான் விவாதத்திற்கு உட்படுகின்றன. இந்த வட்டத்திற்கு அப்பாற்பட்டு இவர்களால் எதுவுமே செய்து விட முடியாது. ஒருவேளை வேறு ஒரு வட்டத்தை உருவாக்க முயற்சித்தால் அது காற்றில் கரைந்த முயற்சியாகவே அமையும். அந்த அளவுக்கு யூதர்கள் ஊடகப் பலம் பெற்றுள்ளனர். சுருங்கச் சொன்னால் யூதர்கள் தீர்மானித்திருக்கும் வட்டத்திற்குள்ளேதான் உலக மக்களின் சிந்தனை, படிப்பு, முயற்சி எல்லாம் இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உலகளாவிய கருத்தியல் பயங்கரவாதம்.
3. யூதர்களே கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம். அவர்களே இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய உரிமையுள்ளவர்கள் என்கிற கருத்தாக்கத்தை ஊடகங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரப்புவது. இதை மேற்குலகில் பல ஊடங்களின் மூலம் பகிரங்கமா
கவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேற்படி கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் அமெரிக்கா, ஐரோப்பிய முன்னாள் / இன்னாள் அதிபர்கள், செயலர்கள் என்று பலரும் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில் தங்களது பாஸிசக் கோட்பாட்டை தங்களின் செல்வாக்குமிகுந்த ஊடகங்களின் வழியாகப் பரப்பிவருகிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் பல கருத்தாக்கங்களையும் இழிவாகவும் பயங்கரமாகவும் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள். மேலும் நம் நாட்டில் உள்ள அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூதர்களின் பங்கு ஏராளம் உள்ளன. யூதர்களோடு மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ஆரிய சங்பரிவார் கூட்டம் அத்தகைய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லீம் வெறுப்பு என்ற அவர்களின் ஜீவநாதத்தை இடைவிடாது ஒலித்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டிய முஸ்லிம்களோ தாங்கள் ஒரே உம்மா என்கிற ஓருடல் என்பதையும் உலகுக்கு நேர்வழிகாட்ட வேண்டிய பொறுப்பை தங்களுக்கு அல்லாஹ் (சுபு) கடமையாகத் தந்திருக்கிறான் என்பதையும் மறந்து அந்நியச் சித்தாந்த நோய் பிடித்துத் திரிகிறார்கள். நோய் தீர பிரார்த்திப்பது மட்டுமல்ல, முயற்சிப்பதும் முக்கியம். முயற்சிப்போமா?
என்ன செய்வது?
உலக அளவிலும் இந்திய அளவிலும் வலிமையாக செய்யப்படுகின்ற திரிபுவாதத்திற்கு சரியான, முறையான பதிலடி கொடுக்க வேண்டும். உலக மக்களில் ஒன்ற¬க் கோடி யூதர்களால் செய்யப்படுகின்ற வேலைகளினால் 180 கோடி முஸ்லிம்கள் கடும் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.
எதிர்கால இளம் தலைமுறைக்கு இந்த ஆபத்துக்களைச் சொல்லி எச்சரிக்கை செய்து வளர்க்க வேண்டும். அருட்கொடையாக, அமானிதமாக நம்மிடம் வழங்கப்பட்டுள்ள தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப்
பிடிக்கும் சமுதாயமாக எதிர்கால முஸ்லிம் சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
உலக வரலாறு, உலக நிகழ்வுகள் குறித்து தெளிவான ஞானம் மற்றும் இவற்றில் ஒரு முஸ்லிம்க்கு உள்ள பொறுப்புகள் குறித்த தெளிவான பார்வை ஆகியவை எல்லா முஸ்லிம்களிடமும் உருவாக வேண்டும்.
தலைமை தாங்குவோரிடத்தில் இஸ்லாமிய எதிரிகளுக்குக் களம் எது என்பதை தீர்க்கமாக அறிந்து, உணர்ந்து செயலாற்றும் ஆற்றல் வேண்டும். ஆபத்துகள் எது என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி, அவற்றிலிருந்து மீண்டிட வழி என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
அடுத்த தலைமுறை எதிர்காலத்திற்கான தங்களது தொழில் துறைகளை தேர்வு செய்யும் போது எது எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் இதழியல் மற்றும் ஊடகம் அவற்றில் நுழைந்து முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலுடன் உருவாக்கப்பட வேண்டும்.
மக்களே, மார்க்கத்தில் பயிற்சி பெறுங்கள்!
உலகின் நிகழ்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்!
உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை வாழ்ந்தும் வெளிப்படுத்தியும் காட்டுங்கள்!
வெற்றி இஸ்லாம் ஒன்றுக்கே!
- அலாவுத்தீன் இம்தாதி
———————————————————————————————————–
இணையதளங்களில் யூதர்களின் ஆதிக்கம்…
இவை தவிர myspace – basynet – wikipedia – woopidoo முதலானவையும் யூதர்களுக்குச் சொந்தமே.

உலகச் செய்தி நிறுவனங்களில் யூதர்களின் ஆதிக்கம்
யூதர்களுக்குச் சொந்தமாக உலகெங்கும் பல செய்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூதச் செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களாகும். ஏனெனில் இந்நிறுவனங்கள் உலகெங்கும் பல கிளைகளை பல்வேறு பெயர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்நிறுவனங்களும் இவற்றின் பல்லாயிரக் கணக்கான கிளைகளும் ஏராளமான தலைப்புகளில் எண்ணற்ற நூல்கள், மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன. மேலும் மின்னணு ஊடகங்களையும் நடத்தி வருகின்றன.
1.    டைம் பாக்ஸ் இது வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்திருப்பதுடன் உலகின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாகத் திகழ்கிறது. இதன் தலைமைப் பீடத்தில் ‘ஜெரால்டுலைபன்’ என்ற யூதர் கோலோச்சுகிறார்.
2. ராண்டம் – செய்தி நிறுவனம்
3.    ஷைமன் அண்ட் ஷோஸ்டர் – செய்தி நிறுவனம்
4.    ரிச்சர்டு பர்ன்ஸ்டைன் என்ற யூதரின் தலைமையிலான வெஸ்டர்ன் நிறுவனம்.
5.    ரூபர்ட்முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம்.
உலகெங்கும் செல்வாக்குச் செலுத்தி வரும் ’ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனமும் யூதர்களால் உருவாக்கப்பட்டு யூதர்களால் நிருவகிக்கப்படுபவையே. இதன் தலைமையகம் பிரிட்டனில் இருக்கிறது.
சினிமாத்துறையில் யூதர்களின் ஆதிக்கம்
1.    ஹாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றான பாரமவுண்ட் நிறுவனம் லூயிஸ் மேயர் என்ற யூதருக்குச் சொந்தம்.
2.    மெட்ரோ கோல்டன் என்ற நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்குகள் இரண்டு யூதர்களுக்குச் சொந்தம்.
3.    மிகப்பிரபலமான பாக்ஸ் நிறுவனம் வில்லியம் பாக்ஸ் என்ற யூதருக்குச் சொந்தம்.
4.    வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வார்னர் என்ற யூதரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது சகோதரிக்குச் சொந்தமாக இருக்கிறது.
5.    யுனிவர்சல் என்ற நிறுவனம் கார்ல் லைமீ என்ற யூதருக்குச் சொந்தம்.
இதுபோலவே பிரிட்டனில் 280க்கும் மேற்பட்ட மிகப்பெரிய சினிமா நிறுவனங்களை யூதர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில்…
யூதர்கள் உலகெங்கும் ஏராளமான தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றால் டெலிபோன், செல்போன் நிறுவனங்கள் என்று பலர் சுருக்கமாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கைவசம் வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பது டெலிபோன், செல்போன், இணையம், வானொலி, தொலைக்காட்சி என்று பல ஊடகங்களை அதுவும் ஆயிரக்கணக்கில் இயக்கும் வசதிகளை உள்ளடக்கியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவற்றை யூதர்கள் உலகெங்கும் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் முப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன.
1. ABC மற்றும் NBC குழுமம்  2. MTV குழுமம்  3. பாக்ஸ் குழுமம்
இவையல்லாமல் நியூ ஹவுஸ் நிறுவனம் மட்டும் 24 தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது.
பிரிட்டனில் ATV குழுமம் என்கிற யூத தொலைத்தொடர்பு நிறுவனம் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் கோசின்ஸ்கி என்ற யூதர் NTV குழுமம் என்ற பெயரில் பல தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறார். இதுபோலவே பிரேசில், உருகுவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பொலிவியா ஜெர்மனி, இத்தாலிய போன்ற தேசங்களில் யூதர்களே 90 விழுக்காடு ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
நன்றி: சமூகநீதி முரசு (01-பிப்ரவரி-2011)

திங்கள், 24 செப்டம்பர், 2012

அன்னை கதீஜா பெண்கள் கலை & அறிவியல் கல்லூரி

அன்புடையீர்,,,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),,,
கண்ணியமிக்க சகோதரர்களே 
தமிழக முஸ்லிம் மக்களின் கல்வி நிலை மேம்படவும் மக்களை கல்வி ரீதியிலும்,வாழ்வியல் ரீதியிலும் பொருளாதார நிலையிலும் மேம்படவும் அதற்கான வழிகளை தேடி செல்ல கூடிய நிலையில் நாம் உள்ளோம், கல்வி ரீதியாக நாம் விழிப்புணர்வு அடைய வேண்டிய அவசியத்தை உணர வேண்டும் , நவீனம் என்ற பெயரில் அந்நிய ஆதிக்க சக்திகள் நம்முடைய கலாச்சாரத்தையும் வாழ்வியல் அடையாளத்தையும் அழிக்கவேண்டும் என்கின்ற நீண்ட திட்டத்தை இன்று  செயல் படுத்தி வருகின்றனர்.
அல்லாஹ்(சுபு) நமக்கு அருளிய குர்ஆன் காட்டிய நெறியிலும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழியிலும் நாம் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும், அத்தகைய நிலையில் தான் நாம் கல்வியும் கற்க வேண்டும் , மார்க்கம்  கூறிய கல்விமுறை நம்மக்களிடையே அறியபடாத சூழ்நிலையில் அதற்கான விழிப்புணர்வு நிகழ்சிகளை சமூக நீதி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் சகோ CMN சலீம் அவர்கள் கடந்த 10 வருடங்களாக இறைவனின் கிருபையால் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறார்கள்,அதன் மூலம் நம் சமுதாய மக்களும் விழிப்புணர்வு அடைந்து,ஆதரவு தந்து கொண்டுயிருகிரார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
கடலோர ஊர்களில் வாழும் முஸ்லிம் பெண்களின் கல்வி நிலையை மேன்படுத்தி பெண்களை அறிவில் சிறந்த கல்வியாளர்களாக மார்க்க கல்வியும் கற்ற பெண் கல்வியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் சகோ CMN சலீம் அவர்கள் தலைவராக உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மூலம் நம்முடைய சமுதாய சொந்தங்களின் பங்களிப்பில் அம்மாபட்டினத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு முதல் அன்னை கதீஜா பெண்கள் கலை & அறிவியல் கல்லூரி செயல்படும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது, இதன் முலம் இப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை உயரும் , பெண் கல்வியாளர்களை உருவாக்கும் BISED (bachelor of islamic school education ) என்கிற சிறப்பு பாடத்திட்டம் 40 மாணவிகளை கொண்டு இயங்கி வருகிறது 
6 கோடி திட்ட செலவில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி இது வரை 119 பங்குதாரர் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது . 31 பங்குகள் மீதி உள்ளது,ஒரு பங்கு தொகை 4 லட்சம் .இறைவனின் மார்க்க கல்வியை கற்று கொடுக்கும் நோக்கத்தில் உருவாக உள்ள இக்கல்லூரியில் பங்களிப்பு செய்து இறைவனின் அருளை பெற கேட்டு கொள்ளுகிறோம்   மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட அலைபேசியில்  தொடர்பு கொள்ளவும்  
துபாய் -இம்ரான் கரீம் -0559739408
தமிழகம் -CMN சலீம் -9382155780 / 9840182251
 .
வரும் 30,1,2,3 ஆகிய தேதிகளில் சகோ CMN சலீம் அவர்கள் அமீரக சுற்று பயணம் மேற்கொள்ளயிருகிறார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

வஸ்ஸலாம் ,
மக்கள் தொடர்பு செயலகம் ,
துபாய்
M.IMRAN KAREEM
+971559739408
imran2mik@gmail.com
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்!

புற்றுநோய் எச்சரிக்கை!

Cancer_cell, brain
மக்களிடையே பெருகிவரும் புற்றுநோய் குறித்து நமது சமூகநீதி முரசு இதழில் பலமுறை தலையங்கமாகவும் கட்டுரைகளாகவும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். சமூகநீதி அறக்கட்டளையின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெளியூர்களில் நடைபெறும் கல்வி மாநாடுகளிலும் இன்றைய இந்த சீர்குலைந்து போன வாழ்வியல் முறையை தொடர்ந்து எச்சரித்தே வருகின்றோம்.
கடந்த 15, 20 ஆண்டுகளாக பாதை மாறிப்போன நமது வாழ்க்கை  முறையினால் ஏற்பட்ட விளைவுகள் தான் இன்றைய இந்த சமூக சீரழிவு. எப்போதும் விளைவுகள் ஏற்படுகின்ற நேரத்தில் கூச்சல் போடும் சமூகமாகவே முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகிறது. மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அது குறித்தான எச்சரிக்கை செய்யும் தலைவர்களும் சமூக அமைப்புகளும் இல்லாமல் போனது தான் அதற்குக் காரணம்.
சமீப காலமாக வெளிவரும் நோய்கள் குறித்த ஆய்வறிக்கைகளை படிக்கும் போது எதிர்கால தலைமுறைக்கு சர்க்கரை நோய், புற்றுநோய், சிறுநீரகம் பாதிப்பு, போன்ற நோய்கள் அதிகம் தாக்குவதற்கான வாழ்க்கை முறைகளையும், சுற்றுச் சூழலையும் மட்டுமே கற்றுக்கொடுத்து விட்டுப்போகிறோம் என்பது நிச்சயமாக தெரிகிறது.
இந்தியாவிலேயே குமரி மாவட்டம்தான் புற்றுநோய் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருப்பதால்தான் இந்த நிலை என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். அதேபோல சமீபத்தில்வந்த சில ஆய்வுகள் கடலூர் மாவட்டத்தை கலக்கிப் போட்டுவிட்டது. கடந்த ஒரு சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தின் பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் மருத்து வர்கள் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தினம் ஒரு
புற்றுநோயாளி கண்டறியப்படுகிறார். அதுவும் குறிப்பாக 20, 30 வயது வாலிபர்கள்தான் அதில் அதிகம் என்றும் கூறுகின்றனர். நுரையீரல், மார்பு, தொண்டை, மற்றும் சிறுநீர் பாதைகளில் தான் புற்று நோயின் தாக்கம் கண்டறியப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்தினர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பத்திரிகை செய்தி வந்துள்ளது. சமீபத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
செல்போன் பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை நாம் சமூகநீதி முரசில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். ஆனால் 7 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து செல்போனில் பேசினால் அதன் கதிர் வீச்சுகள் உடலின் வலிமை குன்றிய திசுக்களில் உடலில் மொத்த எடையில் 1 கிராம் அளவுக்கு பாதிப்பை உண்டாக்கிறது என்ற தகவலை மத்திய அரசு தகவல் ஆணையம் மூலம் தந்துள்ளது. எப்போதுமே செல்போன் நிறுவனங்களின் விளம்பரங்களுக்காக வாய்பிளந்து நிற்கும் நமது பத்திரிகைகள் அந்தச் செய்தியை அவ்வளவாக வெளியிடுவதில்லை!
புதிது புதிதாக வெளியாகும் தொழில் நுட்பங்களும் நவீன எலக்ட்ரானிக் கருவிகளும் மக்களுக்கு வசதி வாய்ப்புகளை பெருக்குகிறது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு அதன் எதிர் விளைவுகள் மிகக் கடுமையானவை என்பதும் உண்மையே!
தொழில்துறை வளர்ச்சி என்ற பெயரில், சுற்றுச் சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசு, தொழிற்சாலைகளின் கழிவு நீர், கடலில் கொட்டும் விஷக் கழிவுகள் போன்றவைகளால் கடலூர் மாவட்டம் மட்டுமல்ல கடலோர மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வே கேள்விக் குறியாகிப் போயுள்ளது. தலைமுறை தலைமுறையாக நோய்களின் பிடியில் சிக்கி சீரழியும் சூழல் உருவாகி உள்ளது. களத்தில் இறங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு சமூக ஆர்வலர்களிடமும், அமைப்புகளிடமும் இருக்கிறது. இல்லையென்றால் விளைவு மிக மோசமாக இருக்கும். வரலாறு நம்மை தூற்றும்.
 
நன்றி : சமூகநீதிமுரசு

சனி, 22 செப்டம்பர், 2012

அறிவை இஸ்லாமிய மயமாக்கல்


முனைவர், எம்.ஏ.எம்.சுக்ரி
முதல்வர், ஜாமிஆ நளீமிய்யா, இலங்கை
———————————————————
பொதுவாக நோக்கும்போது, கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் என்பவை சூன்யத்தில் உருவாகுவதில்லை. அவை World view என அழைக்கப்படும் உலக நோக்கின் பின்னணியிலே தோற்றம் பெறுகின்றன. இந்த வகையில்ஒவ்வொரு கொள்கை மற்றும் கோட்பாடுகளின் பின்னணியில் ஓர் உலகப் பார்வை காணப்படுகின்றது.
“உலக நோக்கு” என்ற இச்சொற்றொடர் பிரபஞ்சம், அதில் மனிதனின் நிலை, மனித வாழ்வு ஆகிய மூன்றையும் பற்றிய கண்ணோட்டத்தையே குறிக்கின்றது. இக்கண்ணோட்டமே ஒரு குறிப்பிட்ட உலக நோக்கில் பிரதிபலிக்கின்றது. இந்த வகையில் மேற்கத்திய அரசியல், பொருளியல், கல்வி, கலாச்சாரம் சுருக்கமாகச் சொன்னால் வாழ்வியல் கோட்பாடுகள் அனைத்தும் மேற்கத்திய உலக நோக்கின் அடிப்படையிலேயே உருவாகின. இந்த உலக நோக்கு தோற்றம்பெற்ற ஐரோப்பிய வரலாற்றுச் சூழலை இங்கு நாம் விளங்குதல் அவசியமாகும்.
ஐரோப்பிய வரலாற்றில் 16,17ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வு கிறிஸ்தவ கோயிலுக்கும், அறிவியலாளர்களுக்குமிடை
யில் நடைபெற்ற மோதலாகும். இக்காலப் பிரிவில் கொப்பர்னிகஸ், கலிலியோ போன்ற அறிவியலாளர்களுக்கு எதிராக கிறிஸ்தவ கோயில் மேற்கொண்ட கடுமையான போக்கும், அவர்களது சுதந்திர சிந்தனையை ஒடுக்கி, கோயிலின் கருத்துத் திணிப்பையும், தன்னாதிக்கத்தையும் நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகளும், அறிவியலாளர்களையும், சிந்தனையாளர்களையும், கிறிஸ்தவக் கோயிலுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்தது. கிறிஸ்தவ கோயிலின் கொள்கைகளுக்கு எதிராக ஆரம்பமாகிய இப்போராட்டம் கிறிஸ்தவ மதத்திற்கெதிரான போராகவும், இறுதியில் மத நம்பிக்கைகள் அனைத்திற்குமே எதிரான ஓர் எழுச்சியாகவும் பரிணாமம் பெற்றது.
மதத்திற்கு எதிரான இந்த சிந்தனைப் பாங்கின் விளைவாகவே சடவாதம் (Materialism), மதச்சார்பின்மை (Secularism) போன்ற கோட்பாடுகள் மேற்கில் தோன்றின. இதன் விளைவாக, மதம் மனித வாழ்வில் அதன் செல்வாக்கை இழந்தது. அறிவியல், முற்றிலும் சடவாத சிந்தனைப்பாங்கில் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
மனித வாழ்வின் அனைத்து விசயங்களையும் அறிவியலின் துணை கொண்டு விளங்கவும், விளக்கவும் முடியும் என்ற கருத்து வலுப்பெற்றது. மனித ஆளுமை, உணர்வுகள், செயல்பாடுகள், வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள், மனித வரலாறு, சமூக மாற்றங்கள் அனைத்தும் சடரீதியாக அணுகப்பட்டு, பாகுபாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டது. புலன்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன.
இத்தகைய வரலாற்றுச்சூழலிலேயே இன்று Social Sciences என அழைக்கப்படும் சமூக விஞ்ஞானக் கலைகள் தோற்றம் பெற்றன.
அறிவியல் வியத்தகு வளர்ச்சியைக் கண்ட காலப்பிரிவில், பௌதீகக் கலைகள் மிகச்சிறப்பான வளர்ச்சியைக் கண்டன. அறிவியலாளர்கள் அறிவியல் முறைமையைப் (Scientific Method) பயன்படுத்தி, பௌதிக விதிகளைக் கண்டுபிடித்து அவற்றின் அடிப்படையில் பௌதிக உலகையும், அதன் இயக்கம், மாற்றங்கள் பற்றியும் விளக்கினர். இந்த அறிவியல் முறைமையினால் தூண்டப்பட்ட சில சிந்தனையாளர்கள் மனித ஆளுமை, உணர்வுகள், செயல்பாடுகள், சமூக மாற்றம், வரலாற்று நிகழ்வுகள், அனைத்தையும் பௌதிக விதிகளைப் பின்பற்றி விளக்க முனைந்தனர். இவ்வாறு அறிவியல் முறைமையைப் பயன்படுத்தி, சமூக வாழ்வு, சமூக வளர்ச்சி, சமூக மாற்றம், ஆகியவற்றை விளக்கும் முயற்சியின் ஊடாகவே சமூகக்கலைகள் தோற்றம் பெற்றன.
சமூகவியல் கலைகள் என இன்று கொள்ளப்படும் கலைகள் அனைத்தும் 150 ஆண்டுகால வரலாற்றையே கொண்டுள்ளன. நவீன சமூகவியலின் தந்தையாக ஆகஸ்ட் காம்ட், (1798-1857) கருதப்படுகின்றார். சமூகவாழ்வு, மாற்றங்கள் ஆகியன பற்றிய ஆய்வானது பௌதீக கலைகளின் முறைமைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
பத்தொன்பதாம்  நூற்றாண்டளவில் இஸ்லாமிய உலகம் மேற்கின் அரசியல் ஆதிக்கத்தின் அறைகூவலை எதிர் நோக்கியது. முஸ்லிம் நாடுகள் படிப்படியாக மேற்கின் அரசியல் ஆதிக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டன. மேற்கத்தியவாதிகள் முஸ்லிம் உலகில் மூன்று முக்கிய திட்டங்களின் அடிப்படையில் செயல்பட்டனர்.
1. அரசியல் ரீதியாக முஸ்லிம் நாடுகளை அடிமைப்படுத்தல்.
2. பொருளாதார ரீதியாக முஸ்லிம் நாடுகளின் வளங்களைச் சுரண்டல்.
3. முஸ்லிம் உலகில் மேற்கத்திய மொழிகள் மற்றும் கல்வி முறையை அறிமுகப்படுத்தி, முஸ்லிம்களை கலாச்சார ரீதியாக அடிமைப்படுத்தி, இஸ்லாமிய பாரம்பரியத்திலிருந்து அவர்களை அந்நியப்படுத்தல். (Alienation).
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் புதிய மேற்கத்திய கல்விமுறையை அறிமுகப்படுத்திய மெக்காலே அதன் நோக்கத்தை மிக வெளிப்படையாகவே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
We must do our best to form a class who may be interpreters between us and the millions we govern – a class of persons, English in taste, in openion, in morals and in intellect
“நாங்கள் எங்களது கல்விமுறையின் மூலம் ஒரு வர்க்கத்தை உருவாக்குதல் வேண்டும். அவர்கள் எங்களுக்கும், நாங்கள் ஆட்சி புரிகின்ற இலட்சக்கணக்கான மக்களுக்குமிடையில், எங்கள் கருத்துக்கள், சிந்தனைகளை விளக்குபவர்களாக இருப்பார்கள். விருப்புக்கள், கருத்துக்கள், ஒழுக்கம், அறிவு அனைத்தைப் பொறுத்தளவிலும் அவர்கள் ஆங்கிலேயர்களாகவே இருப்பார்கள்”.
மெக்காலேயின் இக்கருத்து கீழைத்தேய நாடுகளில் மேற்கத்திய கல்வியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட, அவர்களது கலாச்சாரப் பாரம்பரியத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சிந்திக்கும் வர்க்கத்தை உருவாக்குவதே மேற்கத்திய கல்வியின் நோக்கமாக அமைந்தது என்பதை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இஸ்லாமிய உலகில் மேற்கத்திய கல்வியை அறிமுகம் செய்ததன் நோக்கத்தை திரு. சட்டலியர் (Chatalier) LeMonde Musalman என்ற பிரெஞ்சு மாத இதழில் எழுதிய கட்டுரையில் காணப்படும் பின்வரும் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. “எங்களது கிறிஸ்துவ மிஷனரிகள், மறைமுகமான வழிகளில் முஸ்லிம்களின் விசுவாசத்தை பலவீன மடையச் செய்து சீர்குலைப்பதில் தோல்வியடைந்துவிட்டனர். இதனை மேற்கத்திய மொழிகளினூடாக கருத்துக்களைப் பிரசாரம் செய்வதன் மூலமே சாதிக்க முடியும். இந்த மொழிகளை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் இஸ்லாமிய உலகத்தை மேற்கத்திய கருத்துக்களோடு பரிச்சயமடையச் செய்ய முடியும். இந்த வழியின் மூலமாகவே முஸ்லிம்களின் தனித்துவத்தை இதுவரை பாதுகாக்கத் துணைபுரிகின்ற இஸ்லாமிய சன்மார்க்கக் கோட்பாடுகளை சீர்குலைத்தல், என்ற கிறிஸ்தவ பிரசார நிறுவனங்களின் குறிக்கோளை அடைதல் முடியும்.
இஸ்லாமிய உலகம் அரசியல் ரீதியாக துண்டாடப்படும் போது ஐரோப்பிய கலாச்சாரம் அங்கு காலூன்றுவதற்கான வழிகள் திறக்கப்படும். இதனடியாக முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக பலவீன மடையும் நிலையானது, இயற்கையாகவே உருவாகும். மிகக் குறுகியகாலப் பிரிவிலேயே இஸ்லாமிய உலகமானது ஐரோப்பிய முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டுவிடும். ஐரோப்பிய கலாச்சார செல்வாக்கு காரணமாக முஸ்லிம்களின் சன்மார்க்க நம்பிக்கை பலவீனமடையும் போது, அவர்களிடத்தில் நலிவும் பலவீனமும் தோன்றும். இத்தகைய பலவீனம் முஸ்லிம் உலகம் முழுவதும் பரவிவிட்டால், முஸ்லிம்கள் முழுமையாக அவர்களது பாரம்பரியத்திலிருந்து வேர் பிடுங்கப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களால் மீண்டும் தலைதூக்கவே முடியாது.
முஸ்லிம் உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய கல்வி முறையானது மிகப்பாரதூரமான கலாச்சார, பண்பாட்டு முறைகளை உருவாக்கியது. முஸ்லிம் உலகில் நிலவிய பாரம்பரிய இஸ்லாமிய கல்விமுறையை படிப்படியாக நலிவடையச் செய்து, அதனை காலத்திற்குப் பொருத்தமற்றதாக ஆக்கியது. அடுத்து அது இஸ்லாத்தை விட மேற்கத்திய மதச்சார்பற்ற கல்வியையும், மேற்கத்திய கலாச்சாரப் பெறுமானங்களை மதிக்கின்ற, மேற்கத்திய சடவாத ரீதியில் சிந்திக்கின்ற, சில நேரங்களில் இஸ்லாமிய பெறுமானங்களையே விமர்சிக்கின்ற ஒரு படித்த வர்க்கத்தை உருவாக்கியது.
மேற்கத்திய கல்வியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட இப்பிரிவினர் முஸ்லிம்களின் பிற்போக்கான நிலைக்கு இஸ்லாத்தைக் காரணமாகக் கருதினர். இப்பாதிப்புக்களை நிவர்த்திக்கும் முயற்சியில் சில சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள் ஈடுபட்டனர். ஸர் ஸெய்யித் அஹ்மத்கான், முஹம்மத் அப்துஹு ஆகியோர் இவர்களுள் முக்கியமானவர்களாவர்.
முஸ்லிம் உலகில் நிலவும் கல்வி முறையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரே வழி, பாரம்பரிய இஸ்லாமிய பாடத்திட்டத்தில், மேற்கத்திய அறிவியல் கலைகளை இடம்பெறச் செய்வதேயாகும் என்ற கருத்தை இவர்கள் கொண்டிருந்தனர். மேற்கத்திய கலைகள், அவற்றின் பெறுமானங்களைப் (Values) பொறுத்தளவில் நடுநிலையானவை என்ற அனுமானத்திலேயே இவர்கள் செயல்பட்டனர். மேற்கத்திய கலைகள் முற்றிலும் மேற்கத்திய ஒழுக்கப்பெறுமானங்கள், மதிப்பீடுகள் என்பவற்றின் அடிப்படையிலே கட்டி எழுப்பப்பட்டுள்ளனஎன்ற உணர்வை அவர்கள் பெற்றிருக்கவில்லை.
இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகில் தோன்றிய இஸ்லாமிய எழுச்சியின் காரணமாக, முஸ்லிம் உலகம் மேற்கின் அரசியல் ஆதிக்கத்திலிருந்து மட்டுமன்றி, கலாச்சார, பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறல் வேண்டும் என்ற உணர்வு தோன்ற ஆரம்பித்தது. குர்ஆன், சுன்னாவினதும், முஸ்லிம்களின் கலாச்சாரப் பாரம்பரியங்களினதும் அடிப்படையிலே முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிறுவனங்கள் இஸ்லாமிய மயமாக்கப்பட்டு புணர் நிர்மாணம் செய்யப்படல் வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. முஸ்லிம்களைப் பொறுத்தளவில் அது ஒரு புது முயற்சியன்று.
முஸ்லிம்கள் அவர்களது வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் கிரேக்க கதைகளை அரபுமொழியில் பெயர்க்கும் முயற்சியை மேற்கொண்டபோது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படுகின்ற கிரேக்க இதிகாசங்கள், நாடகங்களை மொழி பெயர்க்காது, முஸ்லிம்களுக்கு பயனளிக்கின்ற வானவியல், கணிதம், மருத்துவம் போன்ற துறை சார்ந்த நூல்களை மட்டுமே மொழி பெயர்த்ததில் இஸ்லாமிய மயமாக்கலின் ஆரம்ப வித்துக்களை நாம் காணமுடிகின்றது. இவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட கிரேக்க கலைகளில் காணப்பட்ட அரிஸ்டாட்டலின் தர்க்கமுறை, தீவிர பகுத்தறிவுக் கண்ணோட்டம் ஆகியவற்றில் காணப்பட்ட இஸ்லாத்துக்கு முரணான அம்சங்கள் தீவிர விசாரணைகளுக்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்தி, அவற்றை இஸ்லாமிய மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட அறிஞர்களில் இமாம் அல் – கஸ்ஸாலி, இமாம் இப்னு தைமியா போன்றோர் குறிப்பிடத்தக் கவராவர்.
முஸ்லிம்கள் பேணி வளர்த்த அறிவியல் கலைகள் ஸ்பெயினூடாக ஐரோப்பாவிற்குப் பரவியதன் காரணமாக, ஐரோப்பாவில் தோன்றிய அறிவியல் கலைகள் முஸ்லிம்களின் உரிமை எனவும், அவற்றை இஸ்லாமிய மயமாக்கும் பணியில் முஸ்லிம்கள் ஈடுபடுதல் வேண்டும் எனவும் அல்லாமா இக்பால் 1930ல் “முஸாபிர்” என்ற தலைப்பிலான தனது கவிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“அரபிகள் ஐரோப்பாவில் தங்களது இறக்கைகளை விரித்தபோது அறிவுக்கும், அறிவியலுக்கும் ஒரு புது அஸ்திவாரமிடப்பட்டது. பாலைவனவாசிகள் நாட்டிய விதையின் மரத்தை ஐரோப்பியர்கள் பிடுங்கிவிட்டனர். அதனை இஸ்லாமிய மயமாக்குபவர் எத்துனை பேறு பெற்றவர்கள்? இந்த தேவதை எமது மூதாதையின் குவளையிலிருந்து வெளியேறியதாகும்.  அதனை மீண்டும் கைப்பற்றுங்கள். ஏனெனில், அது எங்களது வலையிலிருந்து புறப்பட்டது.”
நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு இருபதாம் நூற்றாண்டில் முஸ்லிம் உலகில் தோன்றிய இஸ்லாமிய எழுச்சியின் பல்வேறுபட்ட விளைவுகளின் ஓர் அங்கமே இஸ்லாமிய மயமாக்கப்படல் பற்றிய கோட்பாடாகும். இஸ்லாமிய ஷரிஆ முஸ்லிம்களின் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக, பொருளாதார நிறுவனங்களைப் பொறுத்தளவிலும் பூரணமாக செயல்படுத்தப்படல் வேண்டும் என்ற சிந்தனையின் விளைவே இக்கோட்பாடாகும்.
இஸ்லாமிய மயமாக்கல் என்ற பரந்த கோட்பாட்டில், அறிவை இஸ்லாமிய மயமாக்குதல் என்ற அம்சம் மிக முன்னுரிமை பெறுகின்றது. சமூக நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள் என்பன இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு அடிப்படையாக இது விளங்குகின்றது. அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாட்டை பின்வருமாறு நாம் வரைவிலக்கணப்படுத்தலாம்.
“இஸ்லாமிய மயமாக்கல் என்பது மேற்கத்திய, சமூக அரசியல் கலைகளை, இஸ்லாமிய உலக நோக்கின் அடிப்படையில் எழுப்பப்பட்ட இஸ்லாமிய கல்விக்கோட்பாட்டின் வெளிச்சத்தில் புணர் நிர்மாணம் செய்தல்” என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.
அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாட்டின் முன்னோடிகளாக பேராசிரியர் ஸெய்யித் நகீப் அல் – அத்தாஸ், முனைவர் இஸ்மாயில் ராஜி அல் – பாரூகி, தாஹா ஜாபிர் அலவானி ஆகியோர் பொதுவாகக் கொள்ளப்படுகின்றனர். குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில், இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தின் வழிநின்று நவீன காலத்தின் அறைகூவல்களை எதிர்கொள்ளும் ஒரு கல்விமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மக்கா முகர்ரமாவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தினால், சவூதி அரேபிய அரசாங்கத்தின் அனுசரனையுடன் 1977 – 82க்கும் இடைப்பட்ட ஐந்து வருடகாலப் பிரிவில் நான்கு சர்வதேச மாநாடுகள் இத்தொனிப்பொருளில் நடைபெற்றன. முதலாவது மாநாடு 1977ம் ஆண்டு மக்காவில் மன்னர் அஸீஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. 1980ல் இரண்டாவது மகாநாடு இஸ்லாமாபாத்தில் காயிதே ஆஸாம் பல்கலைகழகத்தில் நடைபெற்றது 1981ல் மூன்றாவது மகாநாடு பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் நடைபெற்றது.
இம்மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பரிந்துரைகள் Recommendation of four World Conferences on Islamic Education  என்ற தலைப்பில் இஸ்லாமிய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இத்தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமிய நாடுகளின் அமைப்பினால் (OIC) இஸ்லாமிய கல்விக்கான உலக மத்திய நிலையம் World Centre of Islamic Education என்ற அமைப்பு ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. 1977ல் மக்காவில் நடைபெற்ற முதலாவது கல்வி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டன.
1. Aims and Objectives of Islamic Education
இஸ்லாமிய கல்வியின் நோக்கங்களும், இலட்சியங்களும் 1979
2. Crisis in Muslim Education முஸ்லிம் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகள் 1979
3. Curriculum and Teacher Education-
பாடவிதானமும், ஆசிரியர் கல்வியும் 1980
4. Social and Natural Sciences in Islamic Perspective – சமூக, அறிவியல் கலைகள் இஸ்லாமிய நோக்கு
5. Philosophy. Literature and Fine Arts -
தத்துவமும், இலக்கியமும் நுண்கலைகளும் 1981
6. Muslim Education in the Modern World -
நவீன உலகில் முஸ்லிம் கல்வி 1981
மேலும் அறிவை இஸ்லாமிய மயமாக்கல், முஸ்லிம் சிந்தனையை புனர் நிர்மானம் செய்தல் போன்ற நோக்கங்களை அடையும் குறிக்கோளோடு 1981ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் “இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் (International Institute of Islamic Thought) நிறுவப்பட்டது. சிறந்த ஆளுமை கொண்ட முஸ்லிம் புத்திஜீவிகள் இதில் அங்கம் வகிக்கின்றனர். அறிவை இஸ்லாமிய மயமாக்கும் பணியில் பல ஆய்வுகளையும் நடத்தி, அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனோடு பல்வேறு துறைகள் சார்ந்த கல்விமான்களை ஆய்வுத் துறையில் ஈடுபடுத்தி, அக்கலைகள் தொடர்பான நூல்களையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
இத்துறையில் அக்பர் S. அஹ்மத் அவர்கள் இஸ்லாமிய மானிடவியல் தொடர்பாக எழுதிய Towards Islamic Anthropology என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இல்யாஸ்பாயூனூஸ் இஸ்லாமிய சமூகவியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்நிறுவனம் உளவியலை இஸ்லாமிய மயமாக்குதல் தொடர்பாக ஒரு கருத்தரங்கை கெய்ரோவில் 1979 இல் நடத்தியது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் “அப்ஹாஸ் நத்வதி இல்மின் நப்ஸ்” என்ற தலைப்பில் அரபு மொழியில் வெளியிடப்பட்டது. அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் இஸ்லாமிய மயமாக்கல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் “Islamization of Attitudes and Practices in Science and Technology” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன.
இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம், அறிவை இஸ்லாமிய மயமாக்கல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கல்விமான்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் Journal of Islamic Social Sciences இஸ்லாமிய சமூகக் கலைகளுக்கான சஞ்சிகை என்ற ஆய்வுச் சஞ்சிகையை வெளியிடுகிறது. கேம்பிரிஜில் உள்ள The Islamic Academy என்ற நிறுவனம் இத்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை Muslim Education என்ற அதன் காலாண்டிதழில் வெளியிட்டு வருகின்றது.
உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியின் பயனாகத் தோன்றிய அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாடு இன்று மிகப்பிரபல்யமும், செல்வாக்கும் பெற்றுள்ளது. முஸ்லிம் உம்மத்தின் மீட்சியானது, மேற்கின் சிந்தனா ரீதியுள்ள கலாச்சார பண்பாட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதிலேயே தங்கியுள்ளது என்ற அடிப்படை உண்மை எல்லா மட்டத்திலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாடு எமது காலப்பிரிவில் முஸ்லிம் உலகில் தோன்றியுள்ள சிந்தனைப் புரட்சியின் ஆரோக்கியமான அறிகுறியாகும்

நன்றி சமூகநீதி முரசு 



வெள்ளி, 21 செப்டம்பர், 2012

புதிய பெண்கள் கலை அறிவியல் கல்லூரி


அல்லாஹ்வின் பேரருளால்…
CMN சலீம் அவர்களின் முயற்சியால் ECR ரோட்டில் அமைந்துள்ள அதிராம்பட்டிணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டிணம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில்…
புதிய பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது.
3
100 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம்.
இஸ்லாமிய அடிப்படையில் பெண் கல்வியாளர்களை உருவாக்கிடவும் இந்த சிறப்புமிகு முயற்சிக்கு துணை செய்து இறைவனுடைய அருளைப் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு
CMN சலீம்
93821 55780
cmnsaleem@yahoo.co.in
Dubai-00971-559739408